Friday, June 5, 2009

தேவதையானவள்..




என் பொழுதுகள்
இருளை நோக்கி நடக்க ஆரம்பித்த
ஒரு அந்திம பொழுதில்
என் செவிகளை கூர்மையாக்கின
உன் குரல்!

சிலகணங்களில்
துண்டிக்கப்பட்ட குரலின் இனிமை
என்னைவிட்டு அகலாமல் அடம்பிடித்து
கொண்டிருக்கையில்

வெளிச்சங்களற்ற இரவில்
குறுந்தகவலில் அன்பை எனக்கு
அனுப்பிவிட்டிருந்தாய்!

செவியிலிருந்து
சிந்தை வரை அந்தகுறுந்தகவல்
உன் குரலானால் இன்னும் எத்தனை
அழகாயிருக்கும் என்று சிந்திக்கையில்

அந்த
அழகிய குரலுக்கான உருவம்
தேடி அலைந்துகொண்டிருக்கிறது
என் நினைவுகள்
ஒரு வனாந்திரத்தில்!

முகமறைத்த
அழகியலோடு இறகுகளற்ற
உருவம் குறுக்கீடுசெய்கையில்

அங்கேயே
நின்றுகொண்டு இதோ உனக்கான
தேவதை யென்றது
என் கவிதை!

No comments:

Post a Comment